பள்ளியா தத்தம் நாட்டுவளங் கூறல்
நஞ்சு போல்விழி மங்கையர் கூடி
நயங்கள் பேசி யிசைபாடி யாடி
பஞ்சு போலடி மெல்ல நடந்து
பணைத்த கொங்கை கனத்திடை தொய்ய
விஞ்சு கோதை விரித்து நறும்புனல்
மீது லாவிவி ளையாடக் கண்டு
மஞ்சு மஞ்சு மலையி லொளிக்கின்ற
மாவலி கங்கை நாடெங்கள் நாடே. 2
வஞ்ச வஞ்சியர் கற்பழித் தோர்மறை
வாண ராருயிர் மாய்த்தவ ரேனும்
செஞ்சொல் வேத விதியால் வருபுனல்
தேவ தேவன் திருக்காசி மேவித்
தஞ்ச நீணதி யென்று மனத்துன்னித்
தர்ப்ப ணம்புரிந் தாலவர் தங்கள்
பஞ்ச பாதக மெல்லாந் தொலைக்கும்
பகீரதா கங்கை நாடெங்கள் நாடே. 3
காசில் பொற்சிலம் பின்சிக ரத்தைக்
கால்வ றித்தே யெறிந்திட வந்த
மாசில் தென்கோண மாமலையைச் சூழும்
மாவலி கங்கை நாடெங்கள் நாடே. 4.
வரமு டைக்கபி லன்முன் னெரித்தநல்
வன்மைச் சாகர ரின்சுவர்க் கம்பெறப்
பரம னைத்தவம் பண்ணியே பெற்ற
பகீரதா கங்கை நாடெங்கள் நாடே
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment