| |
ஒளவையார் தமிழ் நாட்டில் வாழ்ந்த சங்கப்பெண் புலவர்களில்; முக்கியமானவர். தமிழ் மொழிக்காவும் இனத்துக்காவும் தன்னையே அர்ப்பணித்த அவர் அரிய பல நூல்களை இயற்றியுள்ளாh.; மூதுரை ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, ஆகியவை நமக்கு தற்போது கிடைத்துள்ள முக்கியமான நூல்களாகும்.இந்த நுல்கள் சிலவற்றில் ஒன்றுக் கொன்று முரணான கருத்துகள் சில இடம்பெற்றிருப்பதால் அவை பிற்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இடைச் செருகல்களாக இருக்கலாம் என்ற கருத்தும்.ஒளவையார் சங்ககாலத்தில் அதாவது திருவள்ளுவருக்கு சமகாலத்தில் வாழந்தவர் என்றும் அவர் பிற்காலத்தில் கம்பருக்கு சமகாலத்தில் வாழந்தவர் என்ற கருத்தும் சில தமிழ் அறிஞர்களிடையே உண்டு சோழ நாட்டிலிருந்த "அம்பர்" என்ற ஒரு ஊரின் ஒரு தெரு வழியே ஒளவையார் ஒரு நாள் நடந்து சென்றுகொண்டிருந்த போது களைப்பு மிகுதியால் அந்தத் தெருவிலிருந்த ஒரு வீட்டின் திண்ணையில் சற்றே அமர்ந்தார். ஒளவையார் அமர்ந்த திண்ணையக் கொண்ட வீட்டில் "சிலம்பி" என்ற பெயர் கொண்ட தாசி இருந்தாள். தன் வீட்டின் திண்ணையில் ஒரு மூதாட்டி அமர்ந்திருப்பதைக் கண்ட சிலம்பி தான் குடிப்பதற்காக வைத்திருந்த கூழைக் கொண்டு வந்து ஒளவையாருக்குக் கொடுத்தாள். கூழை அருந்திய ஒளவையார் அந்த வீட்டின் சுவற்றிலே கரிக் கட்டியினால் எழுதியிருந்த இரண்டு வரிகளைக் கவனித்தார்: அதில் “தண்ணீருங் காவிரியே தார் வேந்தன் சோழனே மண்ணாவதுஞ் சோழ மண்டலமே" என்று எழுதியிருந்தது. தனக்குப் பசியாரக் கூழ் கொடுத்த சிலம்பியை நோக்கி, "இது என்ன?" என்று கேட்டார் ஒளவையார். “குலோத்துங்க சோழ மன்னனின் அவைக்களப் புலவரான கம்பர் வாயால் பாடல் பெற்றவர்கள் மிகவும் சீரோடும் சிறப்போடும் வாழ்வதாகக் கேள்விப்பட்டு தான் சேர்த்து வைத்திருந்த 500 பொற்காசுகளைக் கொடுத்து தன் மீது ஒரு பாடல் பாட வேண்டுமென்று அவரைக் கேட்டுக் கொண்டதாகவும் அதற்குக் கம்பர், 'ஒரு பாடலுக்கு ஆயிரம் பொன் தர வேண்டுமென்றும் 500 பொன்னுக்கு அரைப் பாடல் தான் கிடைக்கும்” என்றும் கூறிக் கரிக் கட்டியால் இவ்விரண்டு வரிகளைச் சுவற்றில் எழுதிவிட்டுப் போய்விட்டார். கையிலிருந்த 500 பொன்னும் பறிபோனதால் தான் அன்றிலிருந்து வறுமையில் வாடுகிறேன்." என்று கூறினாள் சிலம்பி. அதைக் கேட்ட ஒளவையார் உடனே ஒரு கரித்துண்டினை எடுத்து அவ்விரண்டு வரிகளின் கீழே கீழ்க்கண்ட வரிகளைச் சேர்த்துக் கவிதையைப் பூர்த்தி செய்தார்: "பெண்ணாவாள் அம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாளணியும் செம்பொற் சிலம்பே சிலம்பு." ஒளவையார் வாயால் பாடல் பெற்றதும் சிலம்பியின் புகழ் நாடெங்கும் பரவியது. அவள் கால்களில் செம்பொன்னிலான சிலம்பணியுமளவிற்குப் பெரிய செல்வச் சீமாட்டியாக ஆனாள். தான் 500 பொன் பெற்று ஏழையாக்கிய சிலம்பியை ஒளவையார் கூழுக்குப் பாடிச் செல்வச் செழிப்பு மிக்கவளாக்கி விட்டதைக் கேள்வியுற்ற கம்பர் ஒளவையார் மீது துவேஷம் கொண்டார். ஒரு நாள் ஒளவையார் குலோத்துங்கனின் அரசவைக்கு வருகை தந்தார். அப்பொழுது கம்பர் அவரை நோக்கி ஆரைக் கீரைக்கும் ஒளவைக்கும் சிலேடையாக அதாவது இரு பொருள் படும் படியாக ஒளவையையும் ஆரக்கீரையையும் ஒப்பிட்டு, "ஒரு காலடீ, நாலிலைப் பந்தலடீ" என்று கூறினார். இதற்கு உத்தரமாக ஒளவையார், "எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே மட்டில் பெரியம்மை வாகனமே முட்டமேற்க் கூறையில்லா வீடே, குலராமன் தூதுவனே ஆரையடா சொன்னாயது." தமிழில் "அ" என்பது எண் 8 ஐக் குறிக்கும் “வ" கால் பங்கைக் குறிக்கும். 8, மற்றும் கால் இரண்டையும் சேர்த்தால் "அவ" என வரும். எட்டேகால் லட்சணமே என்றால் "அவ லட்சணமே" எனப் பொருள் படும். எமனேறும் பரி எருமை. எமனேறும் பரியே என்றால் "எருமையே" எனப் பொருள் படும். மட்டில் பெரியம்மை வாகனமே என்றால் "மூதேவியின் வாகனமே" என்று பொருள். கூரையில்லா வீடு குட்டிச் சுவர். கூரையில்லா வீடே என்றால் "குட்டிச் சுவரே" என்று பொருள். "குலராமன் தூதுவனே" என்றால், ராமாயணத்தை எழுதியவனே என்றும், ராமனுக்குத் தூது சென்ற அனுமானான "குரங்கே" என்றும் பொருள் படும். "ஆரையடா சொன்னாயது" என்றால் நீ சொன்னதன் பொருள் ஆரக்கீரை யென்றும் யாரைப் பார்த்து இப்படிச் சொன்னாய் என்றும் இருபொருள் படும். இத்துடன் "அடா" என்ற அடைமொழி சேர்த்துத் தன்னை "அடி" என்றதற்குப் பதிலடி கொடுத்தார். மூதுரை கடவுள் வாழ்த்து வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள் நோக்கு உண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு. நூல் 01. நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந் நன்றி என்று தருங்கொல்? என வேண்டா - நின்று தளரா வளர்தெங்கு தாள் உண்ட நீரைத் தலையாலே தான் தருதலால். 02. நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்துப் போல் காணுமே - அல்லாத ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம் நீர் மேல் எழுத்துக்கு நேர். 03 இன்னா இளமை வறுமை வந்து எய்தியக் கால் இன்னா அளவில் இனியவும் - இன்னாத நாள் அல்லா நாள் பூத்த நன் மலரும் போலுமே ஆள் இல்லா மங்கைக்கு அழகு. 04 அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய் நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர் கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும். 05 அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம் பருவத்தால் அன்றிப் பழா. 06 உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர் பற்றலரைக் கண்டால் பணிவரோ? - கல்தூண் பிளந்து இறுவது அல்லால் பெரும் பாரம் தாங்கின் தளர்ந்து வளையுமோ தான். 07 நீர்ளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற நூலளவே ஆகுமாம் நுண் அறிவு - மேலைத் தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம் குலத்தளவே ஆகும் குணம். 08.நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலம்மிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று. 09 தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற தீயார் சொல் கேட்பதுவும் தீதே - தீயார் குணங்கள் உரைப்பதுவும் தீதே அவரோடு இணங்கி இருப்பதுவும் தீது. 10 நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை. 11 பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும் விண்டு உமிபோனால் முளையாதாம் - கொண்ட பேர் ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவு இன்றி ஏற்ற கருமம் செயல். 12 மடல் பெரிது தாழை மகிழினிது கந்தம் உடல் சிறியர் என்று இருக்க வேண்டா - கடல் பெரிது மண்ணீருமாகாது அதன் அருகே சிற்றூறல் உண்ணீரும் ஆகி விடும். 13 கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள் - சபை நடுவே நீட்டு ஓலை வாசியா நின்றான் குறிப்பு அறிய மாட்டாதவன் நன் மரம். 14 கான மயிலாடக் கண்டிருந்த வான் கோழி தானும் அதுவாகப் பாவித்து - தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினால் போலுமே கல்லாதான் கற்ற கவி. 15. வேங்கை வரிப்புலி நோய் தீர்த்த விடகாரி ஆங்கு அதனுக்கு ஆகாரம் ஆனால்போல் - பாங்கறியாப் புல்லறிவாளருக்குச் செய்த உபகாரம் கல்லின் மேல் இட்ட கலம். 16 அடக்கமுடையார் அறிவிலர் என்று எண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில் ஓடுமீன் ஓட உறுமீன் வரும் அளவும் வாடி இருக்குமாம் கொக்கு. 17.அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல் உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்; - அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டியுறுவார் உறவு. 18 சீரியர் கெட்டாலும் சீரியரே சீரியர் மற்றல்லாதார் கெட்டால் அங்கு என்னாகும்? - சீரிய பொன்னின் குடம் உடைந்தால் பொன்னாகும்; என்னாகும் மண்ணின் குடம் உடைந்தக் கால்? 19.ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர் நாழி முகவாது நானாழி - தோழி நிதியும் கணவனும் நேர் படினும் தம்தம் விதியின் பயனே பயன். 20 உடன் பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா உடன் பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும் அம் மருந்து போல் வாரும் உண்டு. 21 இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்று இல்லை இல்லாளும் இல்லாளேயாமாயின் - இல்லாள் வலி கிடந்த மாற்றமுரைக்கு மேல் அவ்இல் புலி கிடந்த தூறாய் விடும். 22.எழுதியவாறே தான் இரங்கும் மட நெஞ்சே! கருதியவாறு ஆமோ கருமம்? - கருதிப் போய்க் கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல் முற்பவத்தில் செய்த வினை. 23 கற்பிளவோடுப்பர் கயவர்; கடும் சினத்துப் பொற் பிளவோடு ஒப்பாரும் போல்வாரே - வில்பிடித்து நீர் கிழிய எய்த வீடுப்போல மாறுமே சீர் ஒழுகு சான்றோர் சினம். 2 24 நற்றாமரைக் கயத்தில் நல்லன்னம் சேர்ந்தார் போல் கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலா மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில் காக்கை உகக்கும் பிணம். 25 நஞ்சுடடைமை தானறிந்து நாகம் கரந்துறையும் அஞ்சாப் புறம் கிடக்கும் நீர்ப் பாம்பு - நெஞ்சில் கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார் கரவிலா நெஞ்சத் தவர். 26 மன்னனும் மாசுறக் கற்றோனும் சீர் தூக்கின் மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத் தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. 27.கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொல் கூற்றம் அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம் - மெல்லிய வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் கூற்றமே இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண். 28 சந்தன மென் குறடு தான் தேய்ந்த காலத்தும் கந்தம் குறைபடாது ஆதலால் - தம்தம் தனம் சிறியராயினும் தார் வேந்தர் கேட்டால் மனம் சிறியராவரோ மற்று? 29 மருவினிய சுற்றமும் வான் பொருளும் நல்ல உருவும் உயர் குலமுமெல்லாம் - திரு மடந்தை ஆம் போது அவளோடுமாகும்; அவள் பிரிந்து போம் போது அவளோடும் போம். 30 சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாமவரை ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர் குறைக்கும் தனையும் குளிர் நிழலைத் தந்து மறைக்குமாம் கண்டீர் மரம். 0000000000 ஆத்தி சூடி கடவுள் வாழ்த்து ஆத்தி சூடியமர்ந்த தேவனை ஏத்தியேத்தித் தொழுவோம் யாமே. நூல் 1. அறஞ்செய விரும்பு. 2. ஆறுவது சினம். 3. இயல்வது கரவேல். 4. ஈவது விலக்கேல். 5. உடையது விளம்பேல். 6. ஊக்கமது கைவிடேல். 7. எண்ணெழுத் திகழேல். 8. ஏற்ப திகழ்ச்சி. 9. ஐய மிட்டுண். 10. ஒப்புர வொழுகு. 11. ஓதுவ தொழியேல் 12. ஒளவியம் பேசேல். 13. அஃகஞ் சுருக்கேல். 14. கண்டொன்று சொல்லேல். 15. ஙப்போல் வளை. 16. சனிநீ ராடு. 17. ஞயம்பட வுரை. 18. இடம்பட வீடெடேல். 19. இணக்கமறிந் திணங்கு. 20. தந்தைதாய்ப் பேண். 21. நன்றி மறவேல். 22. பருவத்தே பயிர்செய். 23. மண்பறித் துண்ணேல். 24. இயல்பலா தனசெயேல். 25. அரவ மாட்டேல். 26. இலவம்பஞ்சிற் றுயில். 27. வஞ்சகம் பேசேல். 28. அழகலா தனசெயேல். 29. இளமையிற் கல். 30. அறனை மறவேல். 31. அனந்த லாடேல். 32. கடிவது மற. 33. காப்பது விரதம். 34. கிழமைப் படவாழ். 35. கீழ்மை யகற்று. 36. குணமது கைவிடேல். 37. கூடிப் பிரியேல். 38. கெடுப்ப தொழி. 39. கேள்வி முயல். 40. கைவினை கரவேல். 41. கொள்ளை விரும்பேல். 42. கோதாட் டொழி. 43. கௌவை அகற்று. 44. சான்றோ ரினத்திரு. 45. சித்திரம் பேசேல். 46. சீர்மை மறவேல். 47. சுளிக்கச் சொல்லேல். 48. சூது விரும்பேல். 49. செய்வன திருந்தச்செய். 50. சேரிடமறிந்து சேர். 51. சையெனத் திரியேல். 52. சொற்சோர்வு படேல். 53. சோம்பித் திரியேல். 54. தக்கோ னெனத்திரி. 55. தானமது விரும்பு. 56. திருமாலுக் கடிமைசெய். 57. தீவினை யகற்று. 58. துன்பத்திற் கிடங்கொடேல். 59. தூக்கி வினைசெய். 60. தெய்வ மிகழேல். 61. தேசத்தோ டொத்துவாழ். 62. தையல்சொல் கேளேல். 63. தொன்மை மறவேல். 64. தோற்பன தொடரேல். 65. நன்மை கடைப்பிடி. 66. நாடொப் பனசெய். 67. நிலையிற் பிரியேல். 68. நீர்விளை யாடேல். 69. நுண்மை நுகரேல். 70. நூல்பல கல். 000000 கொன்றை வேந்தன் கடவுள் வாழ்த்து கொன்றை வேந்தன் செல்வன் அடியினை என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே. நூல் 1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் 2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று 3. இல்லறம் அல்லது நல்லறம் அன்று 4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர் 5. உண்டி சுருங்குதல் பெண்டிற்கு அழகு 6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் 7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும் 8. ஏவா மக்கள் மூவா மருந்து 9. ஐயம் புகினும் செய்வன செய் 10. ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு 11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம் 12. ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு 13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு 14. கற்பெனப் படுவது சொல் திறம்பாமை 15. காவல் தானே பாவையர்க்கு அழகு 16. கிட்டாதாயின் வெட்டென மற 17. கீழோர் ஆயினும் தாழ உரை 18. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை 19. கூரம்பு ஆயினும் வீரியம் பேசேல் 20. கெடுவது செய்யின் விடுவது கருமம் 21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை 22. கைப் பொருள் தன்னில் மெய்ப் பொருள் கல்வி 23. கொற்றவன் அறிதல் உற்றவிடத்து உதவி 24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு 25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை 26. சந்ததிக்கழகு வந்தி செய்யாமை 27. சான்றோர் என்கை ஈன்றோட்கழகு 28. சிவத்தைப் பேணில் தவத்திற்கழகு 29. சீரைத் தேடின் ஏரைத் தேடு 30. சுற்றத்திற்கழகு சூழ இருத்தல் 31. சூதும் வாதும் வேதனை செய்யும் 32. செய்தவம் மறந்தால் கைத்தவம் ஆளும் 33. சேமம் புகினும் யாமத்துறங்கு 34. சையொத்து இருந்தால் ஐயம் இட்டு உண் 35. சொக்கரென்பவர் அத்தம் பெறுவர் 36. சோம்பரென்பவர் தேம்பித் திரிவர் 37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை 38. தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை 39. திரை கடல் ஓடியும் திரவியம் தேடு 40. தீராக் கோபம் போராய் முடியும் 41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு 42. தூற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும் 43. தெய்வம் சீறின் கைதவம் மாளும் 44. தேடாதழிக்கின் பாடாய் முடியும் 45. தையும் மாசியும் வையகத்து உறங்கு 46. தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது 47. தோழனோடும் ஏழைமை பேசேல் 48. நல்லிணக்கம் அல்லது அல்லல் படுத்தும் 49. நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை 50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை 51. நீர்கம் பொருந்திய ஊரகத்திரு 52. நுண்ணிய கருமமும் எண்ணித்துணி 53. நூல் முறை தெரிந்து சீலத்தொழுகு 54. நெஞ்சை ஒளித்தொரு வஞ்சகம் இல்லை 55. நேரா நோன்பு சீர்hகாது 56. நைபவர் எனினும் நொய்யவுரையேல் 57. நொய்யவர் என்பவர் வெய்யவராவர் 58. நோன்பென்பது கொன்று தின்னாமை 59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும் 60. பாலோடாயினும் காலம் அறிந்துண் 61. பிறன் மனை புகாமை அறம் எனத் தகும் 62. பீரம் பேணில் பாரம் தாங்கும் 63. புலையும் கொலையும் களவும் தவிர் 64. பூரியோர்க்கில்லை சீரிய ஒழுக்கம் 65. பெற்றோர்க்கில்லை செற்றமும் சினமும் 000 நல்வழி கடவுள் வாழ்த்து பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா. நூல் 01 புண்ணியமாம் பாவம் போம் போன நாள் செய்தவை மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள் - எண்ணுங்கால் ஈதொழிய வேறில்லை எச்சமயத்தார் சொல்லும் தீதொழிய நன்மை செயல். 02.சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில் இட்டார் பெரியோர்; இடாதார்இழி குலத்தோர் பட்டாங்கில் உள்ள படி. 03.இடும்பைக்கிடும்பை இயல்பு உடம்பு இது அன்றே இடும் பொய்யை மெய் என்று இராதே - இடும் கடுக உண்டாயின் உண்டாகும் ஊழில் பெரு வலி நோய் விண்டாரைக் கொண்டாடும் வீடு. 04 எண்ணியொரு கருமம் யார்க்கும் செய்யவெண்ணாது புண்ணியம் வந்தெய்த போது அல்லால் - கண்ணில்லான் மாங்காய் விழவெறிந்த மாத்திரைக் கோல் ஒக்குமே ஆங்காலம் ஆகும் அவர்க்கு. 05 வருந்தி அழைத்தாலும் வாராத வாரா பொருந்துவன போமின் என்றால் போகா - இருந்து ஏங்கி நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம் நினைத்து துஞ்சுவதே மாந்தர் தொழில். 06 உள்ளதொழிய ஒருவர்க்கு ஒருவர் சுகம் கொள்ளக் கிடையா குவலயத்தில் வெள்ளக் கடல் ஓடி மீண்டு கரையேறினால் என் உடலோடு வாழும் உயிர்க்கு. 07 எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு பொல்லாப் புழுமலி நோய்ப் புன்குரம்பை - நல்லார் அறிந்திருப்பார் ஆதலினால் ஆம் கமல நீர் போல் பிரிந்திருப்பர் பேசார் பிறர்க்கு. 08.ஈட்டும் பொருள் முயற்சி எண்ணிறந்ததாயினும் ஊழ் கூட்டும்படி அன்றிக் கூடாவாம் - தேட்டம் மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின் தரியாது காணும் தனம். 09 ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் அவ்ஆறு ஊற்றுப் பெருக்காம்உலகு ஊட்டும் - ஏற்றவர்க்கு நல்ல குடிப் பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும் இல்லை என மாட்டார் இசைந்து. 10 ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ? மாநிலத்தீர் - வேண்டாம் நமக்கும் அது வழியே நாம் போமளவும் எமக்கு என்னென்று இட்டுண்டிரும். 11 ஒரு நாள் உணவை ஒழியென்றால் ஒழியாய் இரு நாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒரு நாளும் என் நோவு அறியாய் இடும்பை கூர் என் வயிறே! உன்னோடு வாழ்தல் அரிது. 12.ஆற்றங் கரையின் மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம் உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லைக் கண்டீர் பழுதுண்டு வேறோர் பணிக்கு. 13ஆவாரை யாரே அழிப்பார்? அது அன்றிச் சாவாரை யாரே தவிர்ப்பவர்? ஓவாமல் ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்? மெய் அம்புவி அதன் மேல். 14 பிச்சைக்கு மூத்தகுடி வாழ்க்கை பேசுங்கால் இச்சை பல சொல்லி இடித்துண்கை - சீச்சி வயிறு வளர்க்கைக்கு மானமழியாது உயிர் விடுகை சாலவுறும். 14 15 சிவாய நம என்று சிந்தித்து இருப்போர்க்கு அபாயமொரு நாளும் இல்லை - உபாயம் இதுவே மதியாகும்; அல்லாத எல்லாம் விதியே மதியாய் விடும். 16 தண்ணீர் நில நலத்தால் தக்கோர் குணம் கொடையால் கண் நீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மை கற்பழியா ஆற்றல்; கடல் சூழ்ந்த வையகத்துள் அற்புதமாம் என்றேயறி. 17 செய் தீவினை இருக்கத் தெய்வத்தை நொந்தக்கால் எய்த வருமோ இரு நிதியம்? - வையத்து அறும் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கின்று வெறும் பானை பொங்குமோ மேல்! 18.பெற்றார் பிறந்தார் பெரு நாட்டார் பேருலகில் உற்றார் உகந்தார் என வேண்டார் - மற்றோர் இரணங் கொடுத்தால் இடுவர்; இடாரே சரணம் கொடுத்தாலும் தாம். 19 சேவித்தும் சென்றிரந்தும் தெண் நீர்க்கடல் கடந்தும் பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் போவிப்பம் பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால் நாழி அரிசிக்கே நாம். 20 அம்மி துணையாக ஆறு இழிந்தவாறொக்கும் கொம்மை முலை பகர்வார் கொண்டாட்டம் - இம்மை மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி வறுமைக்கு வித்தாய் விடும். 21 நீரும் நிழலும் நிலம் பொதியும் நெல் கட்டும் பேரும் புகழும் பெரு வாழ்வும் - ஊரும் வருந்திருவும் வாழ் நாளும் வஞ்சமில்லார்க்கு என்றும் தரும் சிவந்த தாமரையாள் தான். 22.பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக் கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்; - கூடுவிட்டிங்கு ஆவிதான் போயின பின்பு யாரே அனுபவிப்பார் பாவிகாள் அந்தப் பணம்? 23 வேதாளம் சேருமே வெள் எருக்குப் பூக்குமே பாதாள மூலி படருமே - மூதேவி சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே மன்றோரம் சொன்னார் மனை. 24 நீறில்லா நெற்றிபாழ்; நெய்யில்லா உண்டிபாழ் ஆறில்லா ஊருக்கழகுபாழ் - மாறில் உடன்பிறப் பில்லா உடம்புபாழ்; பாழே மடக்கொடி இல்லா மனை. 25 ஆன முதலில் அதிகம் செலவானால் மானமழிந்து மதிகெட்டுப் - போனதிசை எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய் நல்லார்க்கும் பொல்லனாம் நாடு. 26 மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின் கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும் பசி வந்திடப் பறந்து போம். 27 ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும் அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை நினையாத முன் வந்து நிற்பினும் நிற்கும் எனையாளும் ஈசன் செயல். 28 உண்பது நாழி உடுப்பது நான்கு முழம் எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண் புதைந்த மாந்தர் குடி வாழ்க்கை மண்ணின் கலம்போலச் சாந்துணையும் சஞ்சலமே தான். 29 மரம் பழுத்தால் வெளவாலை வாவென்று கூவி இரந்தழைப்பார் யாவருமங் கில்லை - சுரந்தமுதம் கற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல் உற்றார் உலகத்தவர். 30 தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார் பூந்தா மரையோன் பொறிவழியே - வேந்தே ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாமொன்றா வெறுத்தாலும் போமோ விதி. 31 இழுக்கு உடைய பாட்டிற்கு இசை நன்று சாலும் ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய வீரத்தின் நன்று விடாநோய்; பழிக்கஞ்சாத் தாரத்தின் நன்று தனி. 32.ஆறிடும் மேடும் மடுவும்போ லாம்செல்வம் மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடும் தண்ணீரும் வாரும்; தருமமே சார்பாக உண்ணீர்மை வீறும் உயர்ந்து. 33.வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம்; வேழத்தில் பட்டுருவும் கோல் பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப் பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின் வேருக்கு நெக்கு விடும். 34 கல்லானே யானாலும் கைப்பொரு ளொன்றுண்டாயின் எல்லாரும் சென்றாங் கெதிர்கொள்வர் - இல்லானை இல்லாளும் வேண்டாள்; மற்றீன்றெடுத்த தாய்வேண்டாள் செல்லாது அவன்வாயிற் சொல். 35 பூவாதே காய்க்கும் மரமுமுள மக்களும் உளும் ஏவாதே நின்று உணர்வார் தாம் உளரே - தூவா விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு உரைத்தாலும் தோன்றாது உணர்வு. 36 நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறும் காலத்தில் கொண்ட கருவளிக்கும் கொள்கைபோல் - ஒண்தொடீ போதம் தனம்கல்வி போன்றவரும் காலம் அயல் மாதர்மேல் வைப்பார் மனம். 37 வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம் அனைத்தாய நூலகத்துமில்லை - நினைப்பதெனக் கண்ணுறுவது அல்லால் கவலைப் படேல் நெஞ்சேமெய் விண்ணுறுவார்க் கில்லை விதி. 38 நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும் அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்றநிலை தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப் போனவா தேடும் பொருள். 39 முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத் தப்பாமல் தன்னுள் பெறானாயின் - செப்பும் கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள் முலையளவே ஆகுமாம் மூப்பு. 39 40 தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை திருவா சகமும் திருமூலர் சொல்லும் |
ஒளவையார் பாடல்கள்
Wednesday 10 November 2010
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
avvayaar marvalous
´தமிழியல் ´ நன்றாக உள்ளது. வாழ்த்துகள்!"
ஆனாலும், தயவுசெய்து ´ர ´- ´ற ´ வேறுபாடுகளில் கவனமெடுக்கவும்.
´முட்டக்கூரையில்லாவீடே....´என்பதுதான் சரியானது.
´கூறையில்லா...´ என்பது தவறானது.
Post a Comment