2011ம் ஆண்டு சறே தமிழ் பாடசால நடத்தும் தமிழ்ப் பெரு விழா

2011ம் ஆண்டு சறே தமிழ் பாடசால நடத்தும் தமிழ்ப் பெரு விழா

சிறுவர் பாடல்கள்

Monday 1 November 2010

|
அம்மா
——————-
amma_kokulan_1007 


பாலும் சோறும் உண்ணத் தந்து
படிக்கச் சொல்லும் அம்மா
காலைத் தூக்கிக் கண்ணில் ஒற்றிக்
கட்டிக் கொஞ்சும் அம்மா


புழுதி போக்கி நீருமாட்டி
பொட்டும் வைக்கும் அம்மா
அழுதிடாமல் பள்ளிக்கூடம்
அழைத்துச் செல்லும் அம்மா

பள்ளிக்கூடம் விட்ட நேரம்
பாதி வழிக்கு வந்து
துள்ளிக் குதிக்கும் என்னைத் தூக்கித்
தோளிற் போடும் அம்மா


அம்மா இங்கே வா! வா!
——————————————-
 147753_m22


அம்மா இங்கே வா! வா!
ஆசை முத்தம் தா! தா!
இலையில் சோறு போட்டு
ஈயைத் தூர ஓட்டு
உன்னைப் போன்ற நல்லார்,
ஊரில் யாவர் உள்ளார்?
என்னால் உனக்குத் தொல்லை
ஏதும் இங்கே இல்லை
ஐயமின்றி சொல்லுவேன்
ஒற்றுமை என்றும் பலமாம்
ஓதும் செயலே நலமாம்
ஔவை சொன்ன மொழியாம்
அஃதே எனக்கு வழியாம்.


அம்மா!
—————
de-malvorlagen-ausmalbilder-foto-mutter-und-sohn-p107481



அன்பு என்றால் அம்மா
ஆறுதல் தருபவள் அம்மா
இரத்தத்தை பாலாக்கி தந்தவள் அம்மா
ஈகை விளக்கியவள் அம்மா
உயிரைக் கொடுப்பவள் அம்மா
ஊழ் உரைத்தவள் அம்மா
என்னைப் பெற்றவள் அம்மா
ஏணியாய் இருந்தவள் அம்மா
ஐயம் நீக்கியவள் அம்மா
ஒற்றுமை விதைத்தவள் அம்மா
ஓய்வின்றி உழைத்தவள் அம்மா
ஒளடதம் ஆனவள் அம்மா
எஃகின் உறுதி அம்மா


இனிய தமிழ்ப்பொங்கல்
—————————————

 1020005

தைத்திருநாள் இல்லமெல்லாம்
தளிர்த்திடும் தைப்பொங்கல்
இத்தனை நாள் காத்திருந்தோம்
இனிய தமிழ்ப்பொங்கல்
கூவி அழைத்திடும் சேவல்
குதித்தெழுவோம் குளிப்போம்
பூவெடுப்போம் புதிதணிவோம்
பொங்கலன்று நாங்கள்
கோலமிட்டு விளக்கேற்றிக்
கும்பிடுவாள் அம்மா
பாலெடுத்துப் பொங்கலுக்குப்
பானை வைப்பார் அப்பா
விரும்பிய மா வாழை பலா
விதவிதமாய்க் கனிகள்
கரும்பிளனீர் படைத்து மனம்
களித்திடுவோம் நாங்கள்
வெண்ணிறப்பால் பொங்கி வர
வெடி சுடுவோம் நாங்கள்
இன்னமுதப் பொங்கலுண்ண
இணைந்து நிற்போம் நாங்கள்


பச்சைக் கிளியே வா! வா!
——————————————–
 e0aeaae0ae9ae0af8de0ae9ae0af88e0ae95e0af8de0ae95e0aebfe0aeb3e0aebf


பச்சைக் கிளியே வா வா!
பாலும் சோறும் உண்ண வா!
கொச்சி மஞ்சள் பூச வா!
கொஞ்சி விளையாட வா!
பைய பைய பறந்து வா!
பாடி பாடிக் களித்து வா!
கையில் வந்து இருக்க வா!
கனியருந்த ஓடி வா!


அணிலே அணிலே ஓடி வா!
———————————————–
 sq11


அணிலே அணிலே ஓடி வா!
அழகு அணிலே ஓடி வா!
கொய்யா மரம் ஏறி வா!
குண்டு பழம் கொண்டு வா!
பாதி பழம் உன்னிடம்,
பாதி பழம் என்னிடம்….
கூடி கூடி இருவரும்
கொறித்து கொறித்து திண்ணலாம்


வாத்து
—————
e0aeb5e0aebee0aea4e0af8de0aea4e0af8112 


குள்ள குள்ள வாத்து
குவா குவா வாத்து
மெல்ல உடலைச் சாய்த்து
மேலும் கீழும் பார்த்து
செல்லமாக நடக்கும்
சின்ன மணி வாத்து!


பூனை
————-
 1811978


சின்னச் சின்னப் பூனை
சிறந்த நல்ல பூனை
என்னைப் பார்த்துத் துள்ளும்
எங்கள் வீட்டுப் பூனை
வட்டமான கண்கள்
வண்ணமான செவிகள்
கட்டையான கால்கள்
காட்டும் நல்ல பூனை
நாயைப் பாத்துச் சீறும்
நகத்தால் மரத்தைக் கீறும்
பாயப் பதுங்கி ஓடும்
பந்தை உருட்டி ஆடும்
உண்ணுஞ் சோறும் பாலும்
ஊட்டி வளர்த்த பூனை
கண்ணைப் போன்ற பூனை
கட்டிக் கரும்புப் பூனை


நாய்க் குட்டி
———————–
freunde 


தோ தோ நாய்க் குட்டி
துள்ளி வா நாய்க் குட்டி
வெள்ளை நிற நாய்க் குட்டி
வீரமான நாய்க் குட்டி

எலியைப் பிடிக்க ஓடும்
புலியைப் போலப் பாயும்
திருடன் வந்தால் குரைக்கும்
லொள் லொள் லொள்

வாலை வாலை ஆட்டும்
பாலைப் பாலைக் குடிக்கும்
நன்றி யுள்ள நாய்க் குட்டி
நான் வளர்க்கும் நாய்க் குட்டி


எறும்பு
————–
 a5dbktyca8niw9pcaxwrxo2cafv716ocasrwu66ca7ex9dpca4xusfuca7mis7wcavyqx60ca405stccar07siycae6yxy0capn4wbrcap5x06nca4obr5pcasvd1pycad9v6nocafoqn0n


சின்ன சின்ன எறும்பே
சிங்கார சிற்றெறும்பே !

உன்னைப் போல் நானுமே
உழைத்திடவே வேணுமெ !

ஒன்றன் பின்னே ஒன்றாய்
ஊர்ந்து போவீர் நன்றாய் !

நன்றாய் உம்மைக் கண்டே
நடந்தால் நன்மை உண்டே !


கை வீசம்மா கை வீசு
————————————–



கை வீசம்மா கை வீசு…
கடைக்குப் போகலாம் கை வீசு…
மிட்டாய் வாங்கலாம் கை வீசு…
மெதுவாய் திங்கலாம் கை வீசு…
சொக்காய் வாங்கலாம் கை வீசு…
சொகுசாய் போடலாம் கை வீசு…
கோயிலுக்குப் போகலாம் கை வீசு…
கும்பிட்டு வரலாம் கை வீசு


சாய்ந்தாடம்மா
————————–
 amma_kokulan_10071


சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
சாயக் குயிலே சாய்ந்தாடு
சோலைக் கிளியே சாய்ந்தாடு
சுந்தர மயிலே சாய்ந்தாடு
குத்து விளக்கே சாய்ந்தாடு
கோவில் புறாவே சாய்ந்தாடு
கண்ணே மணியே சாய்ந்தாடு
கற்பகக் கொடியே சாய்ந்தாடு
தேனே மணியே சாய்ந்தாடு
தென்னவன் முத்தே சாய்ந்தாடு


நிலா நிலா ஓடி வா
———————————
 im0805-27_moon


நிலா நிலா ஓடி வா
நிலாமல் ஓடி வா
மலை மீது ஏறி வா
மல்லிகைப் பூ கொண்டு வா
வட்ட அட்ட நிலவே
வண்ண முகில்ப் பூவே
பட்டம் போல பறந்து வா
பம்பரம் போல சுற்றி வா


மாம்பழம்
—————–
 e0aeaee0aebee0aeaee0af8de0aeaae0aeb4e0aeaee0af8d


மாம்பழமாம் மாம்பழம்
மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம்
தித்திக்கும் மாம்பழம்
அழகான மாம்பழம்
தங்கநிற மாம்பழம்
உங்களுக்கு வேண்டுமா
இங்கே ஓடி வாருங்கள்
பங்கு போட்டுத் தின்னலாம்


நம்பிக்கை காகம்
—————————–
 corn-crow2


காகம் ஒன்று காட்டிலே
தாகத்தாலே தவித்ததாம்
அங்குமிங்கும் தேடியே
வீடு நோக்கிச் சென்றதாம்
அங்கு சிறிய ஜாடியில்
கொஞ்சம் தண்ணீர் இருந்ததாம்
எட்டி எட்டி பார்த்ததாம்
எட்டாமல் போனதாம்
சிறிய சிறிய கற்களை
பொறுக்கி கொண்டு போட்டதாம்
தண்ணீர் மேலே வந்ததாம்
தாகம் தீர குடித்ததாம்
நம்பிக்கையுடைய காக்கா தான்
சந்தோஷமாய் பறந்ததாம்


கன்றுக்குட்டி
———————–

 cimg2952

தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு – அங்கே
துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி
அம்மா என்குது வெள்ளைப்பசு – உடன்
அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி.
நாவால் நக்குது வெள்ளைப்பசு – பாலை
நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி
முத்தம் கொடுக்குது வெள்ளைப்பசு – மடி
முட்டிக் குடிக்குது கன்றுக்குட்டி


வண்ணத்துப் பூச்சி
——————————-
agk1bpbca3d0j22ca3s7muhcautpyo5capj4schcae051xjcaxtv5pqca8ykw3icanfdck9catoklmpcac9aljrca76chfqcaqarhpwca20caq7ca3zjkjhcavy6q6gcafzvvancalexmst 


வண்ணத்துப் பூச்சி வண்ணத்துப்பூச்சி
பறக்குது பார் பறக்குது பார்
அழகான செட்டை அழகான செட்டை
அடிக்குது பார் அடிக்குது பார்

சிவப்பு மஞ்சள் நீலம் பச்சை
பொட்டுக்கள் பார் பொட்டுக்கள் பார்
தொட்டது முடனே தொட்டது முடனே
பட்டது பார் பட்டது பார்

பூக்களின் மேலே பூக்களின் மேலே
பறந்து போய் பறந்து போய்
தேனதை உண்டு தேனதை உண்டு
களிக்குது பார் களிக்குது பார்


ஆட்டுக் குட்டி
————————-
 Corbeaux posés sur des chèvres (Sri Lanka).


ஆட்டுக் குட்டி எந்தன் குட்டி
அருமையான சின்னக் குட்டி
ஓட்டம் ஓடி வந்திடுவாய்
உனக்கு முத்தம் தந்திடுவேன்

சுவரில் ஏறிக் குதித்திடுவாய்
சுற்றிச் சுற்றி வந்திடுவாய்
கள்ளன் கொண்டு போய் விடுவான்
கட்டி உன்னை வைத்திடுவான்

மழைக் காலம்
————————–
regen2 


குடை பிடித்துச் செருப்புமிட்டுப்
புத்தகமுங் கொண்டு
குடுகுடென நடந்து வரும்
குழந்தைகளே கேளீர்

மழைக் காலம் வழி வழுக்கும்
மிகக் கவனம் மக்காள்
வழியருகே வெள்ளமுண்டு
விலகி வரல் வேண்டும்

வெள்ளத்தில் கல்லெறிந்து
விளையாடல் வேண்டாம்
வீண் சண்டையால் வழுக்கி
விழுந்தெழும்ப வேண்டாம்

கண்மணிகாள் நீர்ச்சிரங்கு
காலில் வரும் கவனம்
கண்ணூறக்கம் இன்றியிராக்
கத்த வரும் கவனம்


இன்பத் தமிழ்
———————–



தமிழிக்கும் அமுதென்று பேர் – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர் – இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர் – இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர் – இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச் செம் பயிருக்கு வேர்

தமிழ் எங்கள் இளமைக்குப் பால் -இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் -இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்கு சுடர்தந்த தேன்
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் -இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ.


குழந்தை
—————-
 azbl5y1ca7o0ju7ca4dy5hhcaz3ytl5caqsx17yca066forcacwdnkycaqfca09cacskiq6caf9g6dvcav41ppdcact2t20ca29quhcca5p4l2ecaxvkgkocaba9cehcaswblqjcaki0zql1


மெல்லென அதிர்ந்த மின்னல், அந்தச்
செல்வக் குழந்தையின் சிரிப்பு, நல்ல
இன்பம் வேண்டுவோர் இங்குள்ளார் வாழ
அறஞ்செயல் செய்துதான் அடைய வேண்டுமோ
குளிர்வாழைப்பூக் கொப்பூழ் போன்ற
ஒளிஇமை விலக்கி வெளிப்படும் கண்ணால்
முதுவை யத்தின் புதுமை கண்டதோ?
என்னவோ அதனை எவர்தாம் அறிவார்?
தங்க மாதுளைச் செங்கனி பிளந்த
மாணிக்கம் அந்த மதலையின் சிர்ப்பு.
வாரீர், அணைத்து மகிழவே ண்டாமோ?
பாரீர் அள்ளிப் பருகிடமாட் டோமோ?
செம்பவ ழத்துச் சிமிழ் சாய்ந்த அமுதாய்ச்
சிரித்தது, பிள்ளை சிரிக்கையில்
சிரித்தது வையம், சிரித்தது வானமே.


ஔவைக் கிழவி
—————————-
 avvaiyar


ஔவைக்கிழவி நம் கிழவி
அமுதின் இனிய சொற்கிழவி
செவ்வை நெறிகள் பற்பலவும்
தெரியக் காட்டும் தமிழ்க்கிழவி

கூழுக்காகக் கவி பாடும்
கூனற் கிழவி அவர் உரையை
வாழும் வாழ்வில் ஒரு நாளும்
மறவோம் மறவோம் மறவோமே


ஆத்திசூடி
—————–
 auvai


 அறம் செய விரும்பு.
ஆறுவது சினம்.
இயல்வது கரவேல்.
 ஈவது விலக்கேல்.
 உடையது விளம்பேல்.
 ஊக்கமது கைவிடேல்.
எண் எழுத்து இகழேல்.
 ஏற்பது இகழ்ச்சி.
 ஐயம் இட்டு உண்.
 ஒப்புரவு ஒழுகு.
 ஓதுவது ஒழியேல்.
 ஔவியம் பேசேல்.
அஃகம் சுருக்கேல்


கொன்றை வேந்தன்
———————————-



அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
 ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
 இல்லறம் அல்லது நல்லறம் அன்று.
 ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.
 உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
 ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.
 எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்.
 ஏவா மக்கள் மூவா மருந்து.
 ஐயம் புகினும் செய்வன செய்.
ஒருவனைப் பற்றி ஒரகத்து இரு.
 ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்.
 ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு.
 அஃகமும் காசும் சிக்கெனத் தேடு.


 ஓரினம்.
—————–



கசட தபற வல்லினம்
கசக்கும் வேம்பு மருந்தினம்
ஙஞண நமன மெல்லினம்
ங ப்போல் உறவைக் காக்கணும்
யரல வழள இடையினம்
இரவில் உணவு குறையணும்
தமிழில் மெய்கள் மூவினம்
தமிழர் எல்லாம் ஓரினம்.


அச்சமில்லை அச்சமில்லை
———————————————-
 15


அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதித்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
துச்சமாக எண்ணி நம்மைத் தூறுசெய்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
பிச்சைவாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும்,
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்பத் தில்லையே.
இச்சகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.

கச்சணிந்த கொங்க மாதர் கண்கள்வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
நச்சவாயி லேகொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.


வாகனங்கள்
————————-



சல்சல் வண்டி மாட்டுவண்டி
சவாரி போகும் மாட்டுவாண்டி
பூம்பூம் பூம்பூம் மோட்டார்க்கார்
போகுது தெருவில் மோட்டார்க்கார்

றிங்றிங் றிங்றிங் சயிக்கிள் வண்டி
இரண்டு சில்லு சயிக்கிள் வண்டி
சிக்குப்புக்கு சிக்குப்புக்கு புகைவண்டி
சீக்கிரம் செல்லும் புகைவண்டி

பயணம் நாமும் சென்றிடவே
பற்பல வண்டிகள் இன்றுண்டு
பற்பல இடங்களைப் பார்த்திடுவோம்
பத்திர மாகச் சென்றிடுவோம்.

   -கவிஞர். த. துரைசிங்கம்


அழகு மயில்
———————
 e0aeaee0aeafe0aebfe0aeb2e0af8d


அழகு மயில் ஆடுது
ஆனந்த மாய் ஆடுது
தோகை மயில் ஆடுது
தோகை விரித்து ஆடுது

வண்ண மயில் ஆடுது
வானம் பார்த்து ஆடுது
வந்து நீங்கள் பாருங்கள்
வாழ்த்துக் கூறி ஆடுங்கள்.

-   கவிஞர். த. துரைசிங்கம்


 கோழி
————-
 img_0998
கொக்கர கொக்கர கோழியது
குஞ்சை வளர்க்கும் கோழியது
கிக் கிக் கிக் கிக் குஞ்சுகட்கு
கிளறிக் கொடுக்கும் குப்பையது

பருந்து வானில் பறந்திட்டால்
பார்த்து கோழி கொர்… என்னும்
பயந்த குஞ்சுகள் மறைவினிலே
பதுங்கி நின்று பட்படக்கும்

பருந்து போன பின்னாலே
பார்த்த கோழி குஞ்சுகளைக்
கொக்… கொக்… என்று கூப்பிடுமே
குஞ்சுகள் ஒன்றாய்க் கூடிடுமே.
    கவிஞர். த .துரைசிங்கம்.


மழலைத் தமிழில் நீ பேசு
——————————————
 kinder-002


 சின்னப் பாப்பா நீ பேசு
 சிரித்துச் சிரித்து நீ பேசு
 கன்னித் தமிழில் நீ பேசு
 கட்டிக் கரும்பே நீ பேசு

 அன்பின் வடிவே நீ பேசு
 அழகுத் தமிழில் நீ பேசு
 வண்ன மயிலே நீ பேசு
 வாழும் தமிழில் நீ பேசு

 இன்பக் கனியே நீ பேசு
 இதயம் மகிழ நீ பேசு
 மழலை மொழியில் நீ பேசு
 மனது குளிர நீ பேசு

  -   கவிஞர். த. துரைசிங்கம்.


முயல் போல ஓடுவோம்
——————————————-



குட்டி முயல் ஓடுது
குதித்துக் குதித்து ஓடுது
பற்றை ஒன்றின் மறைவிலே
பதுங்கிக் குந்தி இருக்குது

எட்டி எட்டிப் பார்க்குது
என்னைக் கண்டதும் ஓடுது
பள்ளம் திட்டி பாராமலே
பாய்ந்து பாய்ந்து ஓடுது

ஓடும் முயலைப் போலவே
உள்ளம் உறுதி கொள்ளுவோம்
நாமும் துள்ளி ஓடுவோம்
நன்றாய் ஓடப் பழகுவோம்.

-கவிஞர். த. துரைசிங்கம்


கத்தரி வெருளி
————————
e0ae9ae0af8be0aeaee0ae9ae0af81e0aea8e0af8de0aea4e0aeb0e0aeaae0af8de0aeaae0af81e0aeb2e0aeb5e0aeb0e0af8d1 


கத்தரித் தோட்டத்து மத்தியிலே நின்று
          காவல் புரிகின்ற சேவகா! – நின்று
          காவல் புரிகின்ற சேவகா!
     மெத்தக் கவனமாய்க் கூலியும் வாங்காமல்
          வேலை புரிபவன் வேறுயார்! – உன்னைப்போல்
          வேலை புரிபவன் வேறுயார்?


     கண்ணு மிமையாமல் நித்திரை கொள்ளாமல்
          காவல் புரிகின்ற சேவகா! – என்றும்
          காவல் புரிகின்ற சேவகா!
     எண்ணி உன்னைப்போல் இரவுபகலாக
          ஏவல் புரிபவன் வேறுயார்? – என்றும்
          ஏவல் புரிபவன் வேறுயார்?


     வட்டமான பெரும் பூசினிக்காய் போல
          மஞ்சள் நிற உறு மாலைப்பார்!- தலையில்
          மஞ்சள் நிற உறு மாலைப்பார்!
     கட்டியிறுக்கிய சட்டையைப் பாரங்கே
          கைகளில் அம்பொடு வில்லைப்பார்!-இரு
          கைகளில் அம்பொடு வில்லைப்பார்!


     தொட்டு முறுக்காத மீசையைப்பார்! கறைச்
          சோகிபோலே பெரும் பல்லைப்பார்! – கறைச்
          சோகிபோலே பெரும் பல்லைப்பார்!
     கட்டிய கச்சையில் விட்டுச் செருகிய
          கட்டை உடைவாளின் தேசுபார்! – ஆகா
          கட்டை உடைவாளின் தேசுபார்!


     பூட்டிய வில்லுங் குறிவைத்த பாணமும்
          பொல்லாத பார்வையுங் கண்டதோ ? – உன்றன்
          பொல்லாத பார்வையுங் கண்டதோ ?
     வாட்ட மில்லாப்பயிர் மேயவந்த பசு
          வாலைக் கிளப்பிக்கொண்டோடுதே – வெடி
          வாலைக் கிளப்பிக்கொண்டோடுதே


     கள்ளக் குணமுள்ள காக்கை உன்னைக்கண்டு
          கத்திக் கத்திக் கரைந்தோடுமே – கூடிக்
          கத்திக் கத்திக் கரைந்தோடுமே
     நள்ளிரவில் வருகள்வனுனைக் கண்டு
          நடுநடுங்கி மனம் வாடுமே – ஏங்கி
          நடுநடுங்கி மனம் வாடுமே


     ஏழைக் கமக்காரன் வேளைக் குதவிசெய்
          ஏவற்காரன் நீயே யென்னினும் – நல்ல
          ஏவற்காரன் நீயே யென்னினும்
     ஆளைப்போலப் போலி வேடக்காரன் நீயே
          ஆவதறிந்தன னுண்மையே – போலி
          ஆவதறிந்தன னுண்மையே


     தூரத்திலே யுனைக் கண்டவுட னஞ்சித்
          துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம் – மிகத்
          துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம்
     சேரச் சேரப் போலி வேடக்காரனென்று
          தெரிய வந்ததுன் வஞ்சகம் – நன்று
          தெரிய வந்ததுன் வஞ்சகம்


     சிங்கத்தின் தோலினைப் போர்த்த கழுதைபோல்
          தேசத்திலே பலர் உண்டுகாண் – இந்தத்
          தேசத்திலே பலர் உண்டுகாண்
     அங்கவர் தம்மைக்கண் டேமாந்து போகா
          அறிவு படைத்தனன் இன்றுநான் – உன்னில்
          அறிவு படைத்தனன் இன்றுநான்.


ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
——————————————————–



ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக வாயூறிடுமே

குங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் பாடிப்பும் படைப்போமே

வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தந் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

-நவாலி சோமசுந்தரப்புலவர்-


பவளக் கொடி
———————–



பருத்தித்துறை யூராம்
பவளக்கொடி பேராம்
பாவைதனை யொப்பாள்
பாலெடுத்து விற்பாள்
அங்கவட்கோர் நாளில்
அடுத்ததுயர் கேளிர்!
பாற்குடஞ் சுமந்து
பையப்பைய நடந்து
சந்தைக்குப் போம்போது
தான்நினைந்தாள் மாது:
பாலையின்று விற்பேன்
காசைப்பையில் வைப்பேன்”

முருகரப்பா வீட்டில்
முட்டைவிற்பாள் பாட்டி
கோழிமுட்டை வாங்கிக்
குஞ்சுக்குவைப் பேனே


புள்ளிக்கோழிக் குஞ்சு
பொரிக்குமிரண் டைஞ்சு
குஞ்சுகள் வளர்ந்து
கோழியாகும் விரைந்து
விரந்துவளர்ந் திடுமே
வெள்ளைமுட்டை யிடுமே
முட்டைவிற்ற காசை
முழுதுமெடுத் தாசை
வண்ணச்சேலை சட்டை
மாதுளம்பூத் தொப்பி
வாசனை செருப்பு
வாங்குவேன் விருப்பு

வெள்ளைப்பட் டுடுத்து
மினுங்குதொப்பி தொடுத்துக்
கையிரண்டும் வீசிக்
கதைகள்பல பேசிச்
சுந்தரிபோல் நானே
கடைக்குப்போ வேனே


அரியமலர் பார்ப்பாள்
அம்புசமும் பார்ப்பாள்
பூமணியும் பார்ப்பாள்
பொற்கொடியும் பார்ப்பாள்

சரிகைச்சேலை பாரீர்
தாவணியைப் பாரீர்
வண்ணச்சட்டை பாரீர்
வடிவழகு பாரீர்
என்றுயாரும் புகழ்வர்
என்னையாரோ இகழ்வர்?

பாரும்பாரும்என்று
பவளக்கொடி நின்று
சற்றுத்தலை நமிர்ந்தாள்
தையலென்ன செய்வாள்?

பாலுமெல்லாம் போச்சு
பாற்குடமும் போச்சு
மிக்கதுய ரோடு
வீடுசென்றாள் மாது
கைக்குவரு முன்னே
நெய்க்குவிலை பேசேல்.
 -நவாலி சோமசுந்தரப்புலவர்-


கண்ணன்
—————


கண்ணன் எங்கள் கண்ணனாம்,
கார்மேக வண்ணனாம்
வெண்ணெய் உண்ட கண்ணனாம்,
மண்ணை உண்ட கண்ணனாம்;
குழலினாலே மாடுகள்,
கூடச் செய்த கண்ணனாம்
கூட்டமாகக் கோபியர்,
கூட ஆடும் கண்ணனாம்
மலைக்கு நல்ல குடையென,
மலையைப் பிடித்த கண்ணனாம்
பூதனையின் பால் உறிந்து,
மோக்ஷம் கொடுத்த கண்ணனாம்
உரலிலே கட்டுப் பெற்று,
தவழ்ந்து வந்த கண்ணனாம்
உறியில் வெண்ணையைக் குறிவைத்துண்ட,
திருட்டு மாயக் கண்ணனாம்
அன்னை யசோதைக்கு வாயைக் காட்டி,
அசர வைத்த கண்ணனாம்
விஸ்வரூபம் கண்ட அன்னையை,
மயக்க வைத்த கண்ணனாம்
கோபஸ்த்ரீயுடன் ராஸலீலை,
ஆடி வந்த கண்ணனாம்
பகளாசுரனின் மூக்கைப் பிளந்து,
சாகடித்த கண்ணனாம்.


கணிதம் கற்று உயர்வாய்
——————————————



கணக்கு வரா தென்று
கவலைப்படும் மகளே
கருத்து ஒன்று சொல்வேன் நீ
கவனமாகக் கேளு

கணக்கு வராதென்று
கவலைப்பட்ட சிலபேர்
கணக்கில் மேதையாக
வந்த கதைகள் உண்டு

தெய்வம் நம்முன் தோன்றி
செல்வம் தருவதில்லை
முயற்சி என்றும் வாழ்வில்
இகழ்ச்சி அடைவதில்லை

கடுமையான உழைப்பில் நீ
கவனம் செலுத்த வேண்டும்
பெருமை உனக்கு வந்து
பேரும் புகழும் சேரும்

மனத்தைக் கணக்கில் வைத்து
மகிழ்ச்சியோடு கற்றால்
வருமே உனக்குக் கணக்கு
வாழ்வும் வளமும் பெறலாம்

இதயம் எதிலும் தோய்ந்தால்
ஏற்றமுண்டு மகளே
உதயமாகும் வாழ்வு இந்த
உண்மை புரிந்து பாடு

சாதனைகள் படைத்தோர் இந்தச்
சங்கதிகள் அறிவார் நல்ல
போதனைகள் கேளு இதைப்
புரிந்து கொண்டு பாடு

முயற்சி என்றும் வாழ்வில்
முடங்கிப் போவதில்லை
உயர்ச்சியுண்டு மகளே நீ
உணர்ந்து வெற்றி கொள்ளு

எண்ணும், எழுத்தும் வாழ்வை
ஏற்றங்காணச் செய்யும்
கண்ணின் மணியே நீயும்
கணிதம் கற்று உயர்வாய்.
கவிதை – வேலாயுதம்.தங்கராசா


மனிதனும், மிருகமும்
————————————-
 abdj9elca0xces6cau3h4z1ca5ntilgcaz1gqjsca0sendkcaqo07v8cauk2bm5cax1i9lwcayxt2lqca3oogbpcarg78b2caxpaj9bcadbnal1calc86nfca226sj6caylxyytcaxjyoh7


உணவு தேடிக் காக்கையார்
ஊரைக் கூட்டி உண்ணுவார்
பணத்தைத் தேடி மனிதர் நாம்
பதுக்கி வைத்து வாழ்கிறோம்.

பாலில் நீரை நீக்கியே
பருகவல்லார் அன்னத்தார்
மாவில் கலப் படங்கள் செய்து
மற்றவர்க்குக் கொடுக்கிறோம்.

தேடி அலைந்து சத்துணவைத்
தேனீ நமக்குத் தருகிறார்
நாடி நாம் மற்றவர்க்கு
நன்மை புரிய முயன்றிலோம்.

வயலைப் பூச்சி அழித்திடாமல்
வெட்டுக்கிளியார் உதவுவார்
மயிலைப் பிடித்து சிறகொடித்து
மகிழ்ந்து நாமும் வாழ்கிறோம்.

பாலைத் தந்து நமதுடலைப்
பசுவார் பேணி வளர்க்கிறார்.
ஆடு மாடு விரும்பியுண்ணும்
அறிவிலியாய் வாழ்கிறோம்.

இரக்கம் நமது உள்ளத்தில்
இருக்க வேண்டும் தம்பிகாள்
சுரக்கும் அருள் இறைவனும்
தோன்றி நமக்கு அருளுவார்.

கவிதை – வேலாயுதம்.தங்கராசா


கண்ணே மணியே…படிக்க வா…
—————————————————-



கண்ணே மணியே ஓடிவா
கட்டிக் கரும்பே படிக்க வா

அழகாய் நீயும் பேசிட
அன்னை தமிழை படிக்க வா

அவசியமான தேவைக்கு
ஆங்கிலம் பாடம் படிக்க வா

கணக்காய் வாழ்த் தெரிந்து கொள்ள
கணக்குப் பாடம் படிக்க வா

சான்றோர் பெருமை அறிந்து கொள்ள
சரித்திர பாடம் படிக்க வா

பூமிப் பந்தை புரிந்து கொள்ள
பூகோள பாடம் படிக்க வா

அதிசயம் பலவும் அறிந்து கொள்ள
அறிவியல் பாடம் படிக்க வா

கலைகள் பலவும் கற்றிடவே
கணிணி பாடம் படிக்க வா

கண்ணே மணியே ஓடிவா
கட்டிக் கரும்பே படிக்க வா


எண்களின் பாடல்
—————————–



ஒன்று யாவர்க்கும் தலை ஒன்று
இரண்டு முகத்தில் கண் இரண்டு
மூன்று முக்காலிக்குக் கால் மூன்று
நான்கு நாற்காலிக்குக் கால் நான்கு
ஐந்த் ஒருகை விரல் ஐந்து
ஆறு ஈயின் கால் ஆறு
ஏழு வாரத்தின் நாள் ஏழு
எட்டு சிலந்தியின் கால் எட்டு
ஒன்பது தானியம் வகை ஒன்பது
பத்து இருகை விரல் பத்து

0 comments:

Post a Comment

ஈழ நாட்டியம்

சமஸ்கிருதமயப்பட்ட பரத நாட்டியத்தையும்,தெலுங்கு மயப்பட்ட கர்நாடக சங்கீதத்தையும் ,நமது கலைவடிவங்களாக வருங்கால சந்ததியினருக்கு வழிமொழிகின்றனர். ஈழத்தமிழர்களுக்கென தனியான பல நடன மரபுகள் இருந்தும் அதனை கண்டு கொள்வதில்லை.பரத நாட்டியம் கடந்த நூறாண்டுகளில் கட்டமைக்கப்பட்ட ஒன்று. கிருஸ்ன அய்யரும் அவர் வழி வந்த பலரும் தமிழர் நடனமுறையை சமஸ்கிருதமயப்படுத்தி இன்று பரதர் புனைந்த நாட்டிய சாஸ்திரத்தோடு தொடர்பு படுத்தியுள்ளனர்.ஈழத்தில் ஏரம்பு சுப்பையா மூலம் அறுபதுகளில்அறிமுகப்படுத்தப்பட்ட இவ் வடிவம் இன்று நம்மவர் கலையாக உலகம் முழுவதும் இந்திய நடனம் என்ற பெயரில் உலாவருகிறது.நாம் நமது மரபு வழிப்பட்ட ஈழ நாட்டியத்தை கவனத்தில் எடுக்காமல் அதனை மலினப்படுத்தியே பார்க்கிறோம். உலகமெங்கும் நமது நடன மரபாக உள்ள ஈழ நாட்டியத்தை எழுச்சி பெற செய்ய வேண்டும்.

ஈழ நாட்டியம்

ஈழ நாட்டியம்

பரதத் தமிழ்

பரதத் தமிழ்

ஈழ நாட்டியம்

ஈழ நாட்டியம்

தமிழமுதம்-நிகழ்ச்சிகள் முன் வரைவு

1.தமிழ்த் தாய் வாழ்த்து
2.தமிழமுதம் மைய நோக்கு பாடல்
3.வாழ்க தமிழ் மொழி-ஆடல்
4.தேன் தமிழ் மழலை
5.இசயோடு அசையும் தமிழ்
6.தமிழமுது-சொற்பொழிவு
7.வண்ணத் தமிழ்-பாடல்
8.இன்பத் தமிழ்-பாடல்
9.ஆறுமுகநாவலர்-சொற்பொழிவு
10.கத்தரி வெருளி-பாடல்
11.அக்கினி குஞ்ஞொன்று கண்டேன் -ஆடல்
12.சுவாமி விபுலானந்தர்-சொற்பொழிவு
13.தமிழே தமிழே அழகிய தமிழே-வில்லுப்பாட்டு
14.ஈழ நாட்டியம்-அரச வரவு
15.சங்கத் தமிழ்-சொற்பொழிவு
16.நாடகம்-ஆசிரியர்கள்
17.ஈழநாட்டியம்-அரசி வரவு
18.சிலப்பதிகாரம்-பாடல்
19.முயலார் முயல்கிறார்-சிறுவர் நாடகம்
20.சிறுவர் இசைத் தமிழ் மாலை
21.செம்மொழியான தமிழ் மொழி-ஆடல் அரங்கு


தமிழமுதம் -மைய நோக்கு பாடல்

தமிழும் அமுதும் ஒன்று
தரணியில் அதுவே நன்று


முத்தமிழை பயின்றிடுவோம்
முன்னோர்களின் வழி நடப்போம்
தமிழமுதம் கண்டிடுவோம்
தமிழ் சாரலில் நனைந்திடுவோம்

தொல் பழ நூல்கள் கற்றிடுவோம்
தொன்மை மரபைப் பெற்றிடுவோம்
புதிய இலக்கியம் நாம் படைப்போம்
புகலிட மண்ணில் தமிழ் வளர்ப்போம்

பாட்டும் கூத்தும் எங்களது
பண்பாட்டின் சிகரமது
நாட்டமுடனே நன்றாக
நமது கலைகளை போற்றிடுவோம்

தமிழ் எங்கள் தாய் மொழி
செம்மொழியாக வாழும் மொழி
ஈழம் எங்கள் தாய் நாடு
இனிமை தமிழில் நீ பாடு

ஈழ நாட்டியம் கூத்து

ஈழ நாட்டியம்  கூத்து


இன்னியம்

இன்னியம்

எங்கள் நிலத்தில் எமக்கான கலைகள்

எங்கள் நிலத்தில் எமக்கான கலைகள்


Followers

Blog Archive

Powered by Blogger.