பூவைப்போல சிரிக்க வேணும் பாப்பா-நீ
புகழ் பெறவே வளர வேணும் பாப்பா!
நல்லவற்றைப் படிக்க வேணும் பாப்பா-நீ
நடக்க வேணும் அதுபோல பாப்பா!
அன்னை தந்தை தெய்வமுனக்கு பாப்பா-நீ
அவர்கள் பாதம் பணிய வேணும் பாப்பா!
கூடி வாழப் பழக வேணும் பாப்பா
நம் கூட்டுறவே நாட்டுயர்வு பாப்பா!
நமது நாடு நமது கண்ணே பாப்பா-நீ
நாடு உயர உழைக்க வணும் பாப்பாஆ
உலகம் வியக்க உயர வேணும் பாப்பா-நீ
உறுதியோடு வெற்றி பெறுக பாப்பா
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment