2011ம் ஆண்டு சறே தமிழ் பாடசால நடத்தும் தமிழ்ப் பெரு விழா

2011ம் ஆண்டு சறே தமிழ் பாடசால நடத்தும் தமிழ்ப் பெரு விழா

ஈழத்து பூதந் தேவனார்

Monday 1 November 2010

|
அகநானூறு, குந்தொகை, நந்றிணை ஆகிய நூல்களிலே மொத்தம் ஏழு பாடல்கள் பூதன்றேவனாராற் பாடப்பட்டுள்ளன. அவை பாலை, குறிஞ்சி ஆகிய திணை வகையை விளக்குவன.


குறிஞ்சி

இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாகந்
தோழி சொல்லியது

முதைச்சுவற் கலித்த மூரிச் செந்தினை
ஓங்குவணர்ப் பெருங்குரல் உ­இய பாங்கர்ப்
பகுவாய்ப் பல்லிப் பாடோர்த்துக் குறுகும்
புருவைப் பன்றி வருதிறம் நோக்கிக்
கடுங்கைக் கானவன் கழுதுமிசைக் கொளீஇய 5
நெடுஞ்சுடர் விளக்கம் நோக்கி வந்துநம்
நடுங்குதுயர் களைந்த நன்ன ராளன்
சென்றனன் கொல்லோ தானே குன்றத்து
இரும்புலி தொலைத்த பெருங்கை யானைக்
கவுள்மலிபு இழிதருங் காமர் கடாஅம் 10
இருஞ்சிறைத் தொழுதி யார்ப்ப யாழ்செத்து
இருங்கல் விளரளை அசுணம் ஓர்க்குங்
காம்புபயில் இறும்பிற் பாம்புபடத் துவன்றிக்
கொடுவிரல் உளியங் கெண்டும்
வடுவாழ் புற்றின வழக்கரு நெறியே. 15
- அகநானூறு

தலைமகள் சிறைப்புறத்தானாக வெறியஞ்சிய தோழிக்குச்
சொல்லுவாளாய்த் தலைவி சொல்லியது.

வெறியென உணர்ந்த வேலன் நோய்மருந்து
அறியா னாகுதல் அன்னை காணிய
அரும்பட ரெவ்வம் இன்றுநாம் உழப்பினும்
வாரற்க தில்ல தோழி சாரற்
பிடிக்கை யன்ன பெருங்குரல் ஏனல் 5
உண்கிளி கடியுங் கொடிச்சிகைக் குளிரே
சிலம்பிற் சிலம்புஞ் சோலை
இலங்குமலை நாடன் இரவி னாமே.

- குறுந்தொகை - 360

பாலை

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத்
தோழி சொல்லியது

செறுவோர் செம்மல் வாட்டலுங் சேர்ந்தோர்க்கு
உறுமிடத்து உவக்கு முதவி யாண்மையும்
இல்லிருந்து அமைவோர்க்கு இல்லென்று எண்ணி
நல்லிசை வலித்த நாணுடை மனத்தர்
கொடுவிற் கானவர் கணையிடத் தொலைந்ததோர் 5
படுகளத்து உயர்த்த மயிர்த்தலைப் பதுக்கைக்
கள்ளியம் பறந்தலைக் களர்தொறுங் குழீஇ
உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கருங் கடத்திடை
வெஞ்சுரம் இறந்தன ராயினும் நெஞ்சுருக
வருவர் வாழி தோழி பொருவர் 10
செல்வமங் கடந்து செல்வா நல்லிசை
விசும்பிவர் வெண்குடைப் பசும்பூட் பாண்டியன்
பாடுபெறு சிறப்பிற் கூட லன்னநின்
ஆடவண்டு அரற்று முச்சித்
தோடர் கூந்தல் மரீஇ யோரே.
- அகநானூறு - 231


பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைமகளைச்
செலவு விலக்கியது.

சிறுநுதல் பசந்து பெருந்தோள் சாஅய்
அகலெழில் அல்குல் அவ்வரி வாடப்
பகலுங் கங்குலு மயங்கிப் பையெனப்
பெயலுறு மலரிற் கண்பனி வார
ஈங்கிவள் உழக்கும் என்னாது வினைநயந்து 5
நீங்கல் ஒல்லுமோ ஐய வேங்கை
அடுமுரன் தொலைத்த நெடுநல் யானை
மையலங் கடா அஞ் -ருக்கிமதஞ் சிறந்து
இயக்குநர்ச் செகுக்கு மெய்படு நனந்தலைப்
பெருங்கை யெண்கினங் குரும்பி தேரும்
புற்றுடைச் சுவர புதலியவர் பொதியிற்
கடவுள் போகிய கருந்தாட் கந்தத்து
உடனுறை பழைமையிற் றுறத்தல் செல்லாது
இரும்புறாப் பெடையொடு பயிரும்
பெருங்கல் வைப்பின் மலைமுத லாறே.
- அகநானூறு 307

வினை தலைவைக்கப்பட்டவிடத்துத் தலைமகன்
பாகற்கு உரைத்தது

இன்றை சென்று வருவது நாளைக்
குன்றிழி யருவியின் வெண்தேர் முடுக
இளம்பிறை யன்ன விளங்குசுடர் நேமி
விசும்புவீழ் கொள்ளியிற் பைம்பயிர் துமிப்பக்
காலியற் செலவின் மாலை யெய்திச் 5
சின்னிரை வால்வளைக் குறுமகள்
பன்மா ணாகம் மணந்துவக் குவமே.
- குறுந்தொகை - 189


தோழி கிழத்தியை உடன்போக்கு நயப்பக் கூறியது.

நினையாய் வாழி தோழி நனைகவுள்
அண்ணல் யானை அணிமுகம் பாய்ந்தென
மிகுவலி இரும்புவலிப் பகுவா யேற்றை
வெண்கோடு செம்மறுக் கொளீஇய விடர்முகைக்
கோடை யொற்றிய கருங்கால் வேங்கை 5
வாடுஞ் சினையிற் கிடக்கும்
உயர்வரை நாடனொடு பெயரு மாறே.
- குறுந்தொகை - 343

உலகியல் கூறிப் பொருள்வயிற் பிரிய வலித்த
நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.

அரவுக்கிளர்ந் தன்ன விரவுறு பல்காழ்
வீடுறு நண்துகில் ஊடுவந்து இமைக்குந்
திருந்திழை யல்குற் பெருந்தோட் குறுமகள்
மணியேர் ஐம்பால் மாசறக் கழீஇக்
கூதிர் முல்லைக் குறுங்கால் அலரி 5
மாதர் வண்டொடு சுரும்புபட முடித்த
இரும்பல் மெல்லணை யொழியக் கரும்பின்
வேல்போல் வெண்முகை விரியக் கரும்பின்
வேல்போல் வெண்முகை விரியத் தீண்டி
முதுக்குறை குரீஇ முயன்றுசெய் குடம்பை
மூங்கி லங்கழைத் தூங்க ஒற்றும் 10
வடபுல வாடைக்குப் பிரிவோர்
மடவர் வாழியிவ் வுலகத் தானே
- நற்றிணை - 366

0 comments:

Post a Comment

ஈழ நாட்டியம்

சமஸ்கிருதமயப்பட்ட பரத நாட்டியத்தையும்,தெலுங்கு மயப்பட்ட கர்நாடக சங்கீதத்தையும் ,நமது கலைவடிவங்களாக வருங்கால சந்ததியினருக்கு வழிமொழிகின்றனர். ஈழத்தமிழர்களுக்கென தனியான பல நடன மரபுகள் இருந்தும் அதனை கண்டு கொள்வதில்லை.பரத நாட்டியம் கடந்த நூறாண்டுகளில் கட்டமைக்கப்பட்ட ஒன்று. கிருஸ்ன அய்யரும் அவர் வழி வந்த பலரும் தமிழர் நடனமுறையை சமஸ்கிருதமயப்படுத்தி இன்று பரதர் புனைந்த நாட்டிய சாஸ்திரத்தோடு தொடர்பு படுத்தியுள்ளனர்.ஈழத்தில் ஏரம்பு சுப்பையா மூலம் அறுபதுகளில்அறிமுகப்படுத்தப்பட்ட இவ் வடிவம் இன்று நம்மவர் கலையாக உலகம் முழுவதும் இந்திய நடனம் என்ற பெயரில் உலாவருகிறது.நாம் நமது மரபு வழிப்பட்ட ஈழ நாட்டியத்தை கவனத்தில் எடுக்காமல் அதனை மலினப்படுத்தியே பார்க்கிறோம். உலகமெங்கும் நமது நடன மரபாக உள்ள ஈழ நாட்டியத்தை எழுச்சி பெற செய்ய வேண்டும்.

ஈழ நாட்டியம்

ஈழ நாட்டியம்

பரதத் தமிழ்

பரதத் தமிழ்

ஈழ நாட்டியம்

ஈழ நாட்டியம்

தமிழமுதம்-நிகழ்ச்சிகள் முன் வரைவு

1.தமிழ்த் தாய் வாழ்த்து
2.தமிழமுதம் மைய நோக்கு பாடல்
3.வாழ்க தமிழ் மொழி-ஆடல்
4.தேன் தமிழ் மழலை
5.இசயோடு அசையும் தமிழ்
6.தமிழமுது-சொற்பொழிவு
7.வண்ணத் தமிழ்-பாடல்
8.இன்பத் தமிழ்-பாடல்
9.ஆறுமுகநாவலர்-சொற்பொழிவு
10.கத்தரி வெருளி-பாடல்
11.அக்கினி குஞ்ஞொன்று கண்டேன் -ஆடல்
12.சுவாமி விபுலானந்தர்-சொற்பொழிவு
13.தமிழே தமிழே அழகிய தமிழே-வில்லுப்பாட்டு
14.ஈழ நாட்டியம்-அரச வரவு
15.சங்கத் தமிழ்-சொற்பொழிவு
16.நாடகம்-ஆசிரியர்கள்
17.ஈழநாட்டியம்-அரசி வரவு
18.சிலப்பதிகாரம்-பாடல்
19.முயலார் முயல்கிறார்-சிறுவர் நாடகம்
20.சிறுவர் இசைத் தமிழ் மாலை
21.செம்மொழியான தமிழ் மொழி-ஆடல் அரங்கு


தமிழமுதம் -மைய நோக்கு பாடல்

தமிழும் அமுதும் ஒன்று
தரணியில் அதுவே நன்று


முத்தமிழை பயின்றிடுவோம்
முன்னோர்களின் வழி நடப்போம்
தமிழமுதம் கண்டிடுவோம்
தமிழ் சாரலில் நனைந்திடுவோம்

தொல் பழ நூல்கள் கற்றிடுவோம்
தொன்மை மரபைப் பெற்றிடுவோம்
புதிய இலக்கியம் நாம் படைப்போம்
புகலிட மண்ணில் தமிழ் வளர்ப்போம்

பாட்டும் கூத்தும் எங்களது
பண்பாட்டின் சிகரமது
நாட்டமுடனே நன்றாக
நமது கலைகளை போற்றிடுவோம்

தமிழ் எங்கள் தாய் மொழி
செம்மொழியாக வாழும் மொழி
ஈழம் எங்கள் தாய் நாடு
இனிமை தமிழில் நீ பாடு

ஈழ நாட்டியம் கூத்து

ஈழ நாட்டியம்  கூத்து


இன்னியம்

இன்னியம்

எங்கள் நிலத்தில் எமக்கான கலைகள்

எங்கள் நிலத்தில் எமக்கான கலைகள்


Followers

Blog Archive

Powered by Blogger.