அகநானூறு, குந்தொகை, நந்றிணை ஆகிய நூல்களிலே மொத்தம் ஏழு பாடல்கள் பூதன்றேவனாராற் பாடப்பட்டுள்ளன. அவை பாலை, குறிஞ்சி ஆகிய திணை வகையை விளக்குவன.
குறிஞ்சி
இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாகந்
தோழி சொல்லியது
முதைச்சுவற் கலித்த மூரிச் செந்தினை
ஓங்குவணர்ப் பெருங்குரல் உஇய பாங்கர்ப்
பகுவாய்ப் பல்லிப் பாடோர்த்துக் குறுகும்
புருவைப் பன்றி வருதிறம் நோக்கிக்
கடுங்கைக் கானவன் கழுதுமிசைக் கொளீஇய 5
நெடுஞ்சுடர் விளக்கம் நோக்கி வந்துநம்
நடுங்குதுயர் களைந்த நன்ன ராளன்
சென்றனன் கொல்லோ தானே குன்றத்து
இரும்புலி தொலைத்த பெருங்கை யானைக்
கவுள்மலிபு இழிதருங் காமர் கடாஅம் 10
இருஞ்சிறைத் தொழுதி யார்ப்ப யாழ்செத்து
இருங்கல் விளரளை அசுணம் ஓர்க்குங்
காம்புபயில் இறும்பிற் பாம்புபடத் துவன்றிக்
கொடுவிரல் உளியங் கெண்டும்
வடுவாழ் புற்றின வழக்கரு நெறியே. 15
- அகநானூறு
தலைமகள் சிறைப்புறத்தானாக வெறியஞ்சிய தோழிக்குச்
சொல்லுவாளாய்த் தலைவி சொல்லியது.
வெறியென உணர்ந்த வேலன் நோய்மருந்து
அறியா னாகுதல் அன்னை காணிய
அரும்பட ரெவ்வம் இன்றுநாம் உழப்பினும்
வாரற்க தில்ல தோழி சாரற்
பிடிக்கை யன்ன பெருங்குரல் ஏனல் 5
உண்கிளி கடியுங் கொடிச்சிகைக் குளிரே
சிலம்பிற் சிலம்புஞ் சோலை
இலங்குமலை நாடன் இரவி னாமே.
- குறுந்தொகை - 360
பாலை
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத்
தோழி சொல்லியது
செறுவோர் செம்மல் வாட்டலுங் சேர்ந்தோர்க்கு
உறுமிடத்து உவக்கு முதவி யாண்மையும்
இல்லிருந்து அமைவோர்க்கு இல்லென்று எண்ணி
நல்லிசை வலித்த நாணுடை மனத்தர்
கொடுவிற் கானவர் கணையிடத் தொலைந்ததோர் 5
படுகளத்து உயர்த்த மயிர்த்தலைப் பதுக்கைக்
கள்ளியம் பறந்தலைக் களர்தொறுங் குழீஇ
உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கருங் கடத்திடை
வெஞ்சுரம் இறந்தன ராயினும் நெஞ்சுருக
வருவர் வாழி தோழி பொருவர் 10
செல்வமங் கடந்து செல்வா நல்லிசை
விசும்பிவர் வெண்குடைப் பசும்பூட் பாண்டியன்
பாடுபெறு சிறப்பிற் கூட லன்னநின்
ஆடவண்டு அரற்று முச்சித்
தோடர் கூந்தல் மரீஇ யோரே.
- அகநானூறு - 231
பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைமகளைச்
செலவு விலக்கியது.
சிறுநுதல் பசந்து பெருந்தோள் சாஅய்
அகலெழில் அல்குல் அவ்வரி வாடப்
பகலுங் கங்குலு மயங்கிப் பையெனப்
பெயலுறு மலரிற் கண்பனி வார
ஈங்கிவள் உழக்கும் என்னாது வினைநயந்து 5
நீங்கல் ஒல்லுமோ ஐய வேங்கை
அடுமுரன் தொலைத்த நெடுநல் யானை
மையலங் கடா அஞ் -ருக்கிமதஞ் சிறந்து
இயக்குநர்ச் செகுக்கு மெய்படு நனந்தலைப்
பெருங்கை யெண்கினங் குரும்பி தேரும்
புற்றுடைச் சுவர புதலியவர் பொதியிற்
கடவுள் போகிய கருந்தாட் கந்தத்து
உடனுறை பழைமையிற் றுறத்தல் செல்லாது
இரும்புறாப் பெடையொடு பயிரும்
பெருங்கல் வைப்பின் மலைமுத லாறே.
- அகநானூறு 307
வினை தலைவைக்கப்பட்டவிடத்துத் தலைமகன்
பாகற்கு உரைத்தது
இன்றை சென்று வருவது நாளைக்
குன்றிழி யருவியின் வெண்தேர் முடுக
இளம்பிறை யன்ன விளங்குசுடர் நேமி
விசும்புவீழ் கொள்ளியிற் பைம்பயிர் துமிப்பக்
காலியற் செலவின் மாலை யெய்திச் 5
சின்னிரை வால்வளைக் குறுமகள்
பன்மா ணாகம் மணந்துவக் குவமே.
- குறுந்தொகை - 189
தோழி கிழத்தியை உடன்போக்கு நயப்பக் கூறியது.
நினையாய் வாழி தோழி நனைகவுள்
அண்ணல் யானை அணிமுகம் பாய்ந்தென
மிகுவலி இரும்புவலிப் பகுவா யேற்றை
வெண்கோடு செம்மறுக் கொளீஇய விடர்முகைக்
கோடை யொற்றிய கருங்கால் வேங்கை 5
வாடுஞ் சினையிற் கிடக்கும்
உயர்வரை நாடனொடு பெயரு மாறே.
- குறுந்தொகை - 343
உலகியல் கூறிப் பொருள்வயிற் பிரிய வலித்த
நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.
அரவுக்கிளர்ந் தன்ன விரவுறு பல்காழ்
வீடுறு நண்துகில் ஊடுவந்து இமைக்குந்
திருந்திழை யல்குற் பெருந்தோட் குறுமகள்
மணியேர் ஐம்பால் மாசறக் கழீஇக்
கூதிர் முல்லைக் குறுங்கால் அலரி 5
மாதர் வண்டொடு சுரும்புபட முடித்த
இரும்பல் மெல்லணை யொழியக் கரும்பின்
வேல்போல் வெண்முகை விரியக் கரும்பின்
வேல்போல் வெண்முகை விரியத் தீண்டி
முதுக்குறை குரீஇ முயன்றுசெய் குடம்பை
மூங்கி லங்கழைத் தூங்க ஒற்றும் 10
வடபுல வாடைக்குப் பிரிவோர்
மடவர் வாழியிவ் வுலகத் தானே
- நற்றிணை - 366
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment