அவ்வையாரின் மூதுரை
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டிற்
காக்கை உகக்கும் பிணம்.
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் . ஓர் அரசனைப் பார்க்க ஒரு புலவர் நெடுந்தூரம் நடந்து, களைத்து, புழுதி படிய வந்து சேர்ந்தார். அரசன் புலவருக்கு ஸ்னானம் செய்வித்து, புத்தாடை புனைந்து, வாசனைத் திரவியங்கள் பூசி அவரை தன்னிடம் அழைத்துவரும்படி சேவகனுக்கு கட்டளையிட்டார். அப்படியே அவன் செய்தான்.
புலவருக்கு எண்ணெய் தேய்க்கும்போது அவர் சேவகனை நிறுத்தச் சொல்லி 'ஒருகையில் வைத்து எண்ணெய் தேய்க்கவேண்டாம்', இதை இப்படியே போய் அரசனிடம் சொல்லு என்று அவனை அனுப்பினார். சேவகனும் அப்படியே செய்தான். அரசனின் மதியூகத்தை சோதிக்கவே புலவர் அப்படிச் சொன்னார். அரசன் சேவகனிடம் 'புலவரை எங்கே இருத்தி எண்ணெய் தேய்த்தாய்?' என்று விசாரித்தார். அவன் 'கல்லுக்கும்பி' என்றான். அரசனுக்கு புலவரின் அடிப்பாகம் நொந்திருக்கிறது என்பது விளங்கிவிட்டது. 'ஒரு கை' என்பதற்கு எதிர்ப்பதம் 'பலகை'. ஒரு கையில் வைத்து எண்ணெய் தேய்க்காமல் புலவரை 'பலகையில்' வைத்து எண்ணேய் தேய்க்கும்படி அரசன் கட்டளையிட்டான். புலவரும் அரசனின் மதிநுட்பத்தை வியந்து அவன் மேல் கவி பாடினார் என்பது கதை. கற்றவர் சொல்வது கற்றவருக்கே புரியும்
0 comments:
Post a Comment