2011ம் ஆண்டு சறே தமிழ் பாடசால நடத்தும் தமிழ்ப் பெரு விழா

2011ம் ஆண்டு சறே தமிழ் பாடசால நடத்தும் தமிழ்ப் பெரு விழா

சிறுவர் இலக்கிய முன்னோடியான நவாலியூர் சோமசுந்தரப் புலவர்

Monday 1 November 2010

|
சிறுவர் இலக்கிய முன்னோடியான நவாலியூர் சோமசுந்தரப் புலவர்
Mon, August 16, 2010 18:45
பத்தொன்பதாம் இருபதாம் நூற்றாண்டில் தமிழை தமது மூச்சாக கொண்டு வாழ்ந்த அறிஞர்கள் பலர். இவர்கள் தமிழ் மொழிக்கென பல இலக்கிய வடிவங்களை உருவாக்கியவர்கள். இவர்களால் தமிழ்மொழி செழுமை பெற்று வளர்ந்ததென்றே கூறலாம். சில பாடல்களை கேட்கும்போது நாமும் பாடவேண்டும் என்ற ஊக்கத்தை தர வல்லன. இவ்வாறான பாடல்களை தந்தவர்களுள் தங்கத்தாத்தாவும் ஒருவர்.

இவர் ஈழத்திருநாட்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் நவாலி என்னும் ஊரில் 1880ம் ஆண்டு ஆனி மாதம் 12ம் திகதி வன்னிய சேகர முதலியார் வழித்தோன்றலாய் வாழ்ந்த கதிர்காமர் இலக்குமிப்பிள்ளை என்போருக்கு திருமகனாய் பிறந்தார்.

ஆரம்பத்தில் தனது கல்வியை அருணாசல உபாத்தியாயரிடமும், தனது தந்தையிடமும் திறம்பட கற்ற இவர் பதினைந்தாவது வயதில் பல பாடல்களை தாமாகவே ஆக்கத் தொடங்கினார்.

வட்டுக்கோட்டையில் உள்ள சின்னத்தம்பி ஆசிரியரும் சோமசுந்தரப் புலவரும் சேர்ந்து அவ்வூரில் ஒரு ஆங்கிலப் பாடசாலையைத் தொடங்கினார்கள்.

அப்பாடசாலையில் புலவர் நாற்பது ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் தமிழ் மட்டுமன்றி ஆங்கிலம், இதிகாசம் போன்ற பாடங்களையும் கற்பித்தார்.

இவர் தமிழையும், சைவசமயத்தையும் பல நற்பணிகள் செய்து மேன்மையடையச் செய்தார். தனது 28வது வயதில் இல்லற வாழ்வில் இணைந்து ஐந்து பிள்ளைகளை பெற்று சிறப்பாக வாழ்ந்து வந்தார்.

இவர் யாப்பிலக்கணங்கள் கற்பதற்கு முன்னரே பல தனிப்பாடல்களை பாடினார். இதனால் இவரை \'வரகவி\' என்று அழைத்தனர்.

சிறுவர்களுக்கெனப் பல கதைப்பாடல்களையும் பாடியுள்ளார். \'தாடி அறுந்த வேடன்\', \'எலியும் சேவலும்\' என்ற கதைப்பாடல்கள் இவரின் கவிதை ஆற்றலை பறைசாற்றுவதுடன் சிறுவர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பன.

இவை சிறுவர்களால் நாடகமாகவும் நடிக்கப்பட்டு வருகின்றன. இதனால் இவற்றை கவிதைநாடகம் என்றும் கூறுவர்.

சோமசுந்தரப் புலவர் சிறுவர்களிற்காக ஆடிப்பிறப்பு, கத்தரிவெருளி, புளுக்கொடியல், பவளக்கொடி, இலவுகாத்தகிளி முதலான பல பாடல்களை பாடியுள்ளார்.

இவர் சிறுவர்களுக்காக பாடிய பாடல்கள் \'சிறுவர் செந்தமிழ்\' என்ற பெயரில் 1955ம் ஆண்டு நூலாக வெளிவந்தது.

ஈழத்தில் சிறுவர் இலக்கிய முன்னோடி என்ற பெருமையும் இவருக்குரியதாகும். ஈழத்தில் சிறுவர் இலக்கியம் வளரவேண்டும் என்பதற்காக கல்வி அதிகாரியாக பணியாற்றிய க.ச.அருள்நந்தி அவர்கள் முதன்முதலில் ஒரு சிறுவர் இலக்கியத்திற்கான போட்டியை நடத்தினார்.

இப்போட்டியில் சோமசுந்தரப்புலவர் பங்குபற்றி வெற்றியும் பெற்றார். இதனால் மக்கள் மத்தியில் புகழும் பெற்றார். இவரது காலத்திலேயே விபுலானந்த அடிகளாரும், சுவாமி ஞானப்பிரகாசரும் வாழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

1925ம் ஆண்டு \'உயிரிளங்குமரன்\' என்னும் நாடகத்தை எழுதினார். இந்நாடகத்தின் சிறப்பை பாராட்டிய இலங்கைத் தமிழ்ப் புலவர்கள் \'புலவர்\' என்னும் பட்டத்தை இவருக்குச் சூட்டினார்கள்.

இவர் அந்தாதி, கலம்பகம், வெண்பா, பதிகம் போன்ற பல இலக்கிய வடிவங்களை தந்துள்ளார்.

அதுமாத்திரமல்லமல் தில்லைஅந்தாதி, அட்டமுகில் கலம்பகம், கதிரைச்சிலேடைவெண்பா, கழையோடைவேற்பதிகம், விநாயகர் பாமாலை, மரதனோட்டம், நல்லை திருப்புகழ், நல்லையந்தாதி, நான்மணிமாலை, இலங்கைவளம், தாலவிலாசம், தந்தையார் பதிற்றுப்பத்து, நாமகள் புகழ் மாலை, முருகன் பாமாலை, சுகாதாரக் கும்பி போன்று சுமார் 15000 பாடல்களை (செய்யுள்கள்) இயற்றியுள்ளார்.

ஈழத்தமிழ் கவிதை வரலாற்றில் சிறுவர்பாடல்களால் முக்கியத்துவம் பெற்று \'தங்கத்தாத்தா\' என செல்லமாக அழைக்கப்பட்ட நவாலியூர் சோமசுந்தரப் புலவர் கி.பி. 1953ம் ஆண்டு ஆடி மாதம் 10ம் திகதி மண்ணுலகை விட்டுப்பிரிந்தார்.

இவர் இவ்வுலகைவிட்டுச் சென்றாலும் இவர் விட்டுச்சென்ற இலக்கியங்கள் தமிழ் வாழும்வரை வாழ்ந்து கொண்டே இருக்கும்

0 comments:

Post a Comment

ஈழ நாட்டியம்

சமஸ்கிருதமயப்பட்ட பரத நாட்டியத்தையும்,தெலுங்கு மயப்பட்ட கர்நாடக சங்கீதத்தையும் ,நமது கலைவடிவங்களாக வருங்கால சந்ததியினருக்கு வழிமொழிகின்றனர். ஈழத்தமிழர்களுக்கென தனியான பல நடன மரபுகள் இருந்தும் அதனை கண்டு கொள்வதில்லை.பரத நாட்டியம் கடந்த நூறாண்டுகளில் கட்டமைக்கப்பட்ட ஒன்று. கிருஸ்ன அய்யரும் அவர் வழி வந்த பலரும் தமிழர் நடனமுறையை சமஸ்கிருதமயப்படுத்தி இன்று பரதர் புனைந்த நாட்டிய சாஸ்திரத்தோடு தொடர்பு படுத்தியுள்ளனர்.ஈழத்தில் ஏரம்பு சுப்பையா மூலம் அறுபதுகளில்அறிமுகப்படுத்தப்பட்ட இவ் வடிவம் இன்று நம்மவர் கலையாக உலகம் முழுவதும் இந்திய நடனம் என்ற பெயரில் உலாவருகிறது.நாம் நமது மரபு வழிப்பட்ட ஈழ நாட்டியத்தை கவனத்தில் எடுக்காமல் அதனை மலினப்படுத்தியே பார்க்கிறோம். உலகமெங்கும் நமது நடன மரபாக உள்ள ஈழ நாட்டியத்தை எழுச்சி பெற செய்ய வேண்டும்.

ஈழ நாட்டியம்

ஈழ நாட்டியம்

பரதத் தமிழ்

பரதத் தமிழ்

ஈழ நாட்டியம்

ஈழ நாட்டியம்

தமிழமுதம்-நிகழ்ச்சிகள் முன் வரைவு

1.தமிழ்த் தாய் வாழ்த்து
2.தமிழமுதம் மைய நோக்கு பாடல்
3.வாழ்க தமிழ் மொழி-ஆடல்
4.தேன் தமிழ் மழலை
5.இசயோடு அசையும் தமிழ்
6.தமிழமுது-சொற்பொழிவு
7.வண்ணத் தமிழ்-பாடல்
8.இன்பத் தமிழ்-பாடல்
9.ஆறுமுகநாவலர்-சொற்பொழிவு
10.கத்தரி வெருளி-பாடல்
11.அக்கினி குஞ்ஞொன்று கண்டேன் -ஆடல்
12.சுவாமி விபுலானந்தர்-சொற்பொழிவு
13.தமிழே தமிழே அழகிய தமிழே-வில்லுப்பாட்டு
14.ஈழ நாட்டியம்-அரச வரவு
15.சங்கத் தமிழ்-சொற்பொழிவு
16.நாடகம்-ஆசிரியர்கள்
17.ஈழநாட்டியம்-அரசி வரவு
18.சிலப்பதிகாரம்-பாடல்
19.முயலார் முயல்கிறார்-சிறுவர் நாடகம்
20.சிறுவர் இசைத் தமிழ் மாலை
21.செம்மொழியான தமிழ் மொழி-ஆடல் அரங்கு


தமிழமுதம் -மைய நோக்கு பாடல்

தமிழும் அமுதும் ஒன்று
தரணியில் அதுவே நன்று


முத்தமிழை பயின்றிடுவோம்
முன்னோர்களின் வழி நடப்போம்
தமிழமுதம் கண்டிடுவோம்
தமிழ் சாரலில் நனைந்திடுவோம்

தொல் பழ நூல்கள் கற்றிடுவோம்
தொன்மை மரபைப் பெற்றிடுவோம்
புதிய இலக்கியம் நாம் படைப்போம்
புகலிட மண்ணில் தமிழ் வளர்ப்போம்

பாட்டும் கூத்தும் எங்களது
பண்பாட்டின் சிகரமது
நாட்டமுடனே நன்றாக
நமது கலைகளை போற்றிடுவோம்

தமிழ் எங்கள் தாய் மொழி
செம்மொழியாக வாழும் மொழி
ஈழம் எங்கள் தாய் நாடு
இனிமை தமிழில் நீ பாடு

ஈழ நாட்டியம் கூத்து

ஈழ நாட்டியம்  கூத்து


இன்னியம்

இன்னியம்

எங்கள் நிலத்தில் எமக்கான கலைகள்

எங்கள் நிலத்தில் எமக்கான கலைகள்


Followers

Blog Archive

Powered by Blogger.